;
Athirady Tamil News

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

0

ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தைக் கணிக்கும் பிரபல பிரித்தானியப் பெண்ணான இன்பால் புடின் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்கிறார்.

மேலும், ரஷ்யாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ரஷ்யாவைப் பொருத்தவரை புடின் வெற்றி பெறுவது நிச்சயம் என கருத்து கணிப்பு வௌியாகியுள்ளது.

ரஷ்யாவில் தற்போது அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்யா மட்டுமின்றி, அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களும் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

ரஷ்ய பொதுத்தேர்தல்
11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை பல எதிர்க்கட்சி பிரமுகர்கள், உக்ரைன் போர் குறித்த பொதுக் கருத்தை அறியும் ஒரு வழியாக பார்ப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 114 மில்லியன் ரஷ்யர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், மக்கள் ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் என 3 நாட்கள் வாக்களிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில், புடின் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று கூறுவதோடு அடுத்து வரும் சில ஆண்டுகள் புடினுக்கு சவால் நிறைந்தவையாக இருக்கும் என்பதோடு மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் கடினமான சூழலை அவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்.

பிரபல ஜோதிடரின் கணிப்பு
கடினமான சுழல்களை எதிர்கொண்டு மீண்டு வரும் அவரது திறன் சோதிக்கப்படும் மேலும், ஒரு மனிதராகவும், ஒரு அரசியல்வாதியாகவும் புடினுடைய ஐந்தாவது ஆட்சிக்காலம் சவாலானதாக இருக்கும் என்கிறார்.

அதேவேளை ரஷ்யாவின் எதிர்காலம் சற்றே பிரகாசமானதாக தெரிவதாகக் கூறும் இன்பால், என்றாலும், நாடு முதலில் கடினமான ஒரு காலகட்டத்தை கடந்து செல்லவேண்டியிருக்கும் என்கிறார்.

ரஷ்யா மீண்டும் உலக அரங்கில் மரியாதைக்குரிய ஒரு நாடாக முடியும் என்றும், சொல்லப்போனால், சமாதான முயற்சிகளையும் ரஷ்யா துவங்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார் .

இந்த தேர்தலில் புடின் வெற்றிப்பெற்றால் 5ஆவது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பதோடு 2030 வலை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.