;
Athirady Tamil News

நெடுந்தீவு கடற்பரப்பில் 21 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

0

இலங்கை கடற்பரப்பினுள் எல்லை தாண்டி வந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 இந்திய கடற்றொழிலாளர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக் கடற்பரப்பில் நேற்றிரவு (16) முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே கடற்றொழிலாளர்களும் இரு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்ட நடவடிக்கைகளுக்காக
ஒரு படகில் 12 கடற்றொழிலாளர்களும், மற்றைய படகில் 9 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.