;
Athirady Tamil News

ஏப். 10-ல் திமுக – அதிமுக ஒன்று சேரும்: அண்ணாமலை

0

கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பாஜகத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை, “பணம் செலவிட மாட்டேன் என நான் பேசியதை இபிஎஸ் முழுமையாக கேட்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது. டீ கூட அடுத்தவர் பணத்தில் குடிப்பவர் இபிஎஸ்.

10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் வளர்ச்சியா?

குளமையான இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் உயர திராவிடக் கட்சிகளே காரணம்.

ஏப்ரல் 10-க்கு பிறகு திமுக – அதிமுக பங்காளி கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தலின் போது என்னை தோற்கடிக்க இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள்.” என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.