;
Athirady Tamil News

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி அமைச்சின் மகிழ்ச்சியான தகவல்!

0

நாட்டில் முதலாம் தரம் முதல் 5ம் தரம் வரையிலான அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பிரதான உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் நாளையதினம் (25-03-2024) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு, கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர் மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

9,134 அரசாங்க பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 100 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கி இந்த உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதற்காக 09 மாகாண சபைகளுக்கும் நேரடியாக வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், உலக உணவுத் திட்டம், அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் இதற்கு அனுசரணை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.