;
Athirady Tamil News

தடுப்பூசியால் பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த விபரீதம்

0

களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது, அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலையில் அனுமதி
இந்த சம்வத்தில் 10 மாணவர்கள் பாதிப்படைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.