;
Athirady Tamil News

ஐ.எம்.எப் உடனான ஒப்பந்தம் சட்டமாகிறது..! ரணில் வெளியிட்ட அறிவிப்பு

0

நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு சட்ட முறைமையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் சட்டத்தரணிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

நிதியத்துடனான ஒப்பந்தம்
சீர்குலைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான உடனடித் தீர்வு சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டமே எனத் தெரிவித்த ரணில்,

அதன் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சட்டமாக்கவுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அனைத்து துறைகளும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக புதிய சட்ட முறைமையொன்று கொண்டுவரப்படும்.

அந்த செயற்பாடுகளுக்கு சட்டத்துறையில் உள்ள அனைவரினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் வலியுறுத்தியுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.