;
Athirady Tamil News

போலி செய்தியை பரப்பும் ரஷ்யா! திட்டவட்டமாக கூறும் உக்ரைன்

0

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையத்தைத் உக்ரைன் தாக்கியதாக வெளியான செய்திகளை உண்மைக்கு புறம்பானவை என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அன்று ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையமான Rosatom, டிரோன் விமானம் தொடர் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் மூன்று ஊழியர்கள் காயப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்தது.

அத்துடன் ஒரு சரக்கு துறைமுகம் மற்றும் தளத்தின் 6 உலைகளில் ஒன்றின் கூரையையும் டிரோன்கள் தாக்கியதாகவும் அது கூறியது.

போலிப் பிரச்சாரம்
மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை உக்ரேனிய டிரோன் விமானம் தாக்கியதாக ரஷ்ய அதிகாரிகளும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உக்ரைன் மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஆண்ட்ரி கோவலென்கோ (Andriy Kovalenko), உக்ரேனியப் படைகள் அணுமின் நிலையத்தை தாக்கியதாக கூறப்படுவது போலிப் பிரச்சாரம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”உக்ரைனில் இருந்து ஆலை மற்றும் அணு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வருவதாக பாசாங்கு செய்து, டிரோன்கள் மூலம் ரஷ்யா நிலையத்தை தாக்குகிறது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.