;
Athirady Tamil News

கிணற்றுக்குள் விழுந்த பூனை: காப்பாற்ற முயன்ற ஐவருக்கு நேர்ந்த கதி

0

இந்தியாவில் கிணற்றில் விழுந்த பூனையை காப்பாற்ற முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில தெரிய வருவதாவது, இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் பூனை ஒன்று விழுந்துள்ளது.

விஷவாயு தாக்கி மயக்கம்
இதனையடுத்து பூனையை காப்பாற்ற ஒரு நபர் கிணற்றுக்குள் இறங்கியபோது அவர் கிணற்றுக்குள் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார்.

அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து 5 பேர் உள்ளே இறங்கியுள்ளனர்.

இதில், 5 பேர் உயிரிழந்த நிலையில் ஒரே ஒருவர் மட்டும் கிராமத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மீட்கும் பணியில் தொய்வு
இந்த சம்பவம் நடைபெற்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கிணற்றில் விழுந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

மேலும், கிணற்றுக்குள் சேறு அதிகமாக இருந்ததால் சேறு அகற்றும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், நள்ளிரவு வரை மீட்கும் பணிகள் தொடர்ந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.