;
Athirady Tamil News

ஹரி மேகன் தம்பதிக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ள மன்னர் சார்லஸ்

0

கோடை விடுமுறைக்கு, பால்மோரல் எஸ்டேட்டுக்கு வருமாறு தனது இளைய மகனான ஹரிக்கும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் மன்னர் சார்லஸ்.

ஆனால், அந்த அழைப்பு ஹரி மேகன் தம்பதிக்கு மிகவும் இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளதாக கருதப்படுகிறது.

உண்மையான அழைப்பு
மன்னர் சார்லசைப் பொருத்தவரை, தனது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இளவரசி கேட்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், உண்மையாகவே கோடை விடுமுறையை குடும்பத்துடன் செலவிட ஹரி, மேகன் குடும்பம் பிரித்தானியாவுக்கு வரவேண்டுமென அவர் விரும்புகிறார். ஆக, அது கடமைக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அல்ல, உண்மையான அழைப்பு.

ஹரி மேகன் தம்பதிக்கு மிகவும் இக்கட்டான சூழல்
எனவே, மன்னர் அழைத்துள்ள நிலையில், அதுவும் குடும்பம் சிக்கலான ஒரு சூழ்நிலையை கடந்துசெல்லும் இந்த நேரத்தில், ஹரியும் மேகனும் பிரித்தானியா வந்தாகவேண்டும் என்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. மன்னர் அழைத்து வரவில்லையானால் கடும் விமர்சனம் எழும். அதை ஹரியும் சரி, மேகனும் சரி, நிச்சயம் விரும்பமாட்டார்கள்.

ஆனால், மேகனோ மன்னர், வில்லியம் மற்றும் மேகன் தன்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என எதிர்பார்க்கிறார். அப்படியிருக்கும் நிலையில், தன் பெருமையை கழற்றிவைத்துவிட்டு அவர் எப்படி பிரித்தானியாவுக்குத் திரும்புவார் என்பது தெரியவில்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn.

ஆனால், தனக்கும் கேட்டுக்கும் புற்றுநோய் என தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, நிச்சயம் ஹரியும் மேகனும் தனது அழைப்புக்கு நேர்மறையான பதிலைத்தான் தருவார்கள் என மன்னர் சார்லஸ் நம்புகிறார். ஆக, இக்கட்டான இந்த சூழலில் ஹரியும் மேகனும் எப்படி நடந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.