;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

பாகிஸ்தானிய மாகாணத்தில் பனிப்பாறை உருகுவதால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் என எச்சரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் பாகிஸ்தானில் ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட அதிக மழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை
வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மேலும் மோசமடையக் கூடும் என்றும், எந்த ஆபத்தும் நேராமல் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 87 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.