;
Athirady Tamil News

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பிற்கு ஈடாக செலவுகளும் அதிகரிப்பு: சாகல பகிரங்கம்

0

நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரித்துள்ளதாக அதிபர் பணிக்குழுவின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke) தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை “பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லையா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

ஐ.எம்.எப் வழங்கும் கடன்
இந்த நிலையில் கேள்விக்கு பதிலளித்த சாகல ரத்நாயக்க, “நிச்சயமாக ஐ.எம்.எப் வழங்கும் கடனால் மாத்திரம் பொருளாதார ரீதியில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை.

அதற்காக நாம் இப்போது வருமானத்தின் அளவை அதிகரிக்கும் திட்டத்திற்குள் செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் எம்மால் நாடு என்ற வகையில் மகிழ்ச்சியடைய முடியும்.

அரச ஊழியர்களின் சம்பளம் கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்டது. எனினும் அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரித்துள்ளன. எனவே, வருமானத்தின் அளவை அதிகரிப்பதற்கான திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

நான் அடிக்கடி கூறும் விடயம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும்“ என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.