புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம்: மீண்டும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சூளுரை
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு அனுப்பியே தீருவோம் என மீண்டும் சூளுரைத்துள்ளார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
தயார் நிலையில் விமானங்கள்
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளாக ருவாண்டா திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்துவந்துள்ளார்கள் என்று கூறிய ரிஷி, இதுவரை நடந்ததெல்லாம் போதும், இனி தாமதிக்கமுடியாது, இன்று இரவு நாடாளுமன்றம் கூடும், ருவாண்டா திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடந்தே தீரும் என்று கூறியுள்ளார் அவர்.
இனி, ஆனால், ஒருவேளை, என்ற பேச்செல்லாம் கிடையாது, இந்த விமானங்கள் ருவாண்டாவுக்கு போயே தீரும் என்கிறார் ரிஷி. 10 அல்லது 12 வாரங்களில் ருவாண்டாவுக்கு புறப்பட விமானங்கள் தயார் என்கிறார் அவர்.
அவரது கூற்றுப்படி, ஜூலை மாதத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விமானங்கள் புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அது நாடாளுமன்ற வாக்கெடுப்புகளுக்குப் பிறகுதான் என்பதை மறுப்பதற்கில்லை!