;
Athirady Tamil News

துபாய் வெள்ளத்திற்கு காரணம் இந்து கோயில் தான்! பாகிஸ்தானியர் பேச்சு

0

அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில் தான் துபாய் வெள்ளத்துக்கு காரணம் என பாகிஸ்தானியர் ஒருவர் பேசும் வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் செயற்கையான முறையில் மழை பொழிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரலாறு காணாத அளவு மழை பொழிவு இருந்தது.

ஓமன், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகளவில் மழை பெய்தது, வருடம் முழுவதும் பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால் துபாய் நகரமே வெள்ளத்தில் மிதந்தது.

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகின, விமான போக்குவரத்து சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இதற்கு காரணம் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயில் என பாகிஸ்தானியர் ஒருவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.