;
Athirady Tamil News

யாழில் ஆதரவற்ற விலங்குகளை பராமரித்து வரும் பெண்

0

யாழ்ப்பாணத்தில் கைவிடப்பட்ட விலங்குகளை பராமரிக்கும் பணியை சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகி எனப்படுபவர் முன்னெடுத்து வருகின்றார்.

அண்மையில் தீவகத்தில் இருந்து இறைச்சிக்காய் கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட பசுக்களை பொறுப்பெடுத்து அவரால் ஊர்காவற்றுறையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட பசுக்கள் சரணாலயத்தில் பராமரித்து வருகின்றார்.

அன்பே சிவம் விருது
இந்நிலையில், அவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஏற்கனவே, தீவகத்திலும் ஏனைய பல பிரதேசங்களிலும் மனிதநேய கல்வி ஆன்மீகப் பணிகள் பலவற்றை மேற்கொண்டு வரும் இவருக்கு இவ்வாண்டுக்குரிய அன்பே சிவம் விருதை சைவ மகா சபை கடந்த சிவராத்திரியில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.