;
Athirady Tamil News

இலங்கையில் அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ள சாரதிகளுக்கான வெற்றிடங்கள்

0

இலங்கையின் (Sri Lanka) அரசு மருத்துவமனை அமைப்பில் அவசர நோயாளர் காவு வாகனங்களின் சாரதிகளுக்கு வெற்றிடங்கள் இருப்பதாக அரசு சுகாதார சேவை சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அவசர நோயாளர் காவு வாகனங்களின் சாரதிகளுக்கு கிட்டத்தட்ட 300 வெற்றிடங்கள் இருப்பதாக அதன் தலைவர் டபிள்யூ.டி.விஜேசிங்க (W. D. Wijesinghe) தெரிவித்துள்ளார்.

ஆட்சேர்ப்பு
இதில் 32 சாரதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தற்போதைய அமைச்சரிடம் இருந்து அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும் ஆட்சேர்ப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.