;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் காணாமல்போன சிறுவன் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

0

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் காணாமல் போன சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் நேற்று (27.04.2024) மதியம் பரந்தனில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வீட்டை விட்டு நேற்று முன்தினம் வெளியில் புறப்பட்ட சிறுவன் இரவாகியும் வீட்டுக்கு வராததால் பெற்றோர் அச்சமடைந்து அயல் கிராமங்களில் தேட தொடங்கினர்.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காணாமல்போன சிறுவனை பெற்றோர் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் தேடி வந்தனர்.

இந்த நிலையில் காணாமல் போன சிறுவன் நேற்று மதியம் பரந்தன் பகுதியில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.