;
Athirady Tamil News

பிரித்தானியாவில் வாழ விரும்பவில்லை: லண்டனுக்கு 5 மணி நேரம் பயணிக்கும் நபர் சொன்ன காரணம்

0

ஜேர்மனியில் இருந்து லண்டனுக்கு பணி நிமித்தம் பல மணி நேரம் பயணிக்கும் நபர், தான் ஏன் பிரித்தானியாவில் வசிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

4 ரயில் பயணம்
Seb என அறியப்படும் அந்த நபர் பணி நிமித்தம் ஜேர்மனியில் இருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்கும் அந்த அனுபவத்தை தொடர்ந்து தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து, மக்களை ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்.

ஒரு விமான பயணம், அதைத் தொடர்ந்து 4 ரயில் பயணம் என ஒவ்வொரு வாரமும் லண்டனுக்கு பயணிக்கிறார். ஆனால் ஏன் அவர் லண்டனில் வசிக்கவில்லை என்பது பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது. தற்போது அதன் காரணத்தை அவரே வெளிப்படுத்தியுள்ளார்.

அது பொருளாதார காரணம் மட்டுமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் Hamburg பகுதியில் தமது துணையுடன் Seb வசித்து வருகிறார் என்றே கூறப்படுகிறது. லண்டனில் 5 மணிக்கு அலுவலக வேலைகளை முடித்துவிட்டு Canary Wharf-ல் இருந்து புறப்படும் Seb ஒரு மணி நேரத்தில் ஹீத்ரோ விமான நிலையம் சென்று சேர்வார்.

ஒவ்வொரு வாரமும்
பாதுகாப்பு சோதனைகள் முடித்து உணவும் எடுத்துக்கொண்டு சரியான நேரத்தில் விமானத்தில் புறப்படுவார் என குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் இரண்டு ரயில் பயணம் முடித்து வீட்டுக்கு செல்லும் போது மணி 11.04 என்கிறார் Seb.

ஆனால் தினமும் 10 மணி நேரம் பயணப்படும் சூழல் அவருக்கு இல்லை. அவர் ஒவ்வொரு வாரமும் நான்கு நாட்கள் மட்டுமே லண்டனில் தங்கும் நிலை உள்ளது. இருப்பினும் அவர் எடுத்துக்கொள்ளும் பயண நேரந்தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.