;
Athirady Tamil News

க.பொ.த (சா/த) பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

0

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உயர்தரத்தை தொடர விரும்பும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

3 காரணங்களினப்படிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாமதமான பாடசாலை கல்வி பாடத்திட்டத்தை உள்ளடக்கும், கல்வி அமைச்சின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கல்வி நடவடிக்கைகள்
எதிர்காலத்தில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகள் போன்ற அரச பாடசாலை பரீட்சைகளின் காலவரையறையை வழமைபடுத்துவதற்கான அமைச்சின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் இது இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

பாடசாலை மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதியில் ஏற்படும் காலதாமதத்தை தடுப்பதற்காகவும் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் விளையாட்டுத் திறன்களின் அடிப்படையில் இடைநிலை தரங்களுக்கு மாணவர்களை இனி அனுமதிக்கபடமாட்டார்கள் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அதிபர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அமைச்சு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.