;
Athirady Tamil News

கனடாவில் நாற்பது நிமிடங்களுக்கு ஒரு திருட்டு: வெளியான அதிர்ச்சி தகவல்

0

கனடாவின்(canada) ரொறன்ரோ(toronto)பகுதியில் ஒவ்வொரு நாற்பது நிமிடங்களுக்கு ஒரு தடவை வாகனமொன்று திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயம் கடந்த ஆண்டில் பதிவான புள்ளிவிபரத் தகவல்களின் அடிப்படையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

மேலும், இந்த ஆண்டில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
அதன்போது, வாகனங்கள் கொள்ளையிடப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு்ள்ளது.

இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த காவல்துறையினரும், நகர நிர்வாகமும் கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.