;
Athirady Tamil News

கென்யாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழப்பு

0

கென்யாவில்(kenya) கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 170 ஐ தாண்டியது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழையால் தலைநகர் நைரோபி உட்பட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில்,வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மட்டுமின்றி, கட்டிட இடிபாடுகளிலும் சிக்கி 120 பேர் உயிரிழந்தனர்.

மீட்கும் பணி
அத்துடன் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வெள்ளப்பெருக்கினால் நாடு முழுவதும் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு
நைரோபியில் உள்ள பழமையான அணையான கிஜாப் சேதமடைந்து, அதன் தடுப்புச்சுவர் இடிந்தது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும், பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த நிலையில், இலட்சக்கணக்கான மக்கள் அங்கு இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.