;
Athirady Tamil News

2000 ஐ கடந்த கைது எண்ணிக்கை: அமெரிக்காவில் வெடித்துள்ள மாபெரும் போராட்டங்கள்

0

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தள்ள அமெரிக்க கல்லூரி வளாகங்களில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைள் 2,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்லூரி வளாகங்களில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை இரவு முதல் வியாழன் பகல் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் நடவடிக்கை
இந்நிலையில், கைதானவர்களின் எண்ணிக்கை 2000 கடந்துள்ளதாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, காவல்றையினரால் அவர்களின் கூடாராங்களும் அகற்றப்பட்டுள்ளது.

பைடன் எச்சரிக்கை
மேலும், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் எவருக்கும் போராட உரிமை உள்ளது என்றும், ஆனால் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.