;
Athirady Tamil News

ரஷ்யாவில் பிரித்தானிய ஆயுதம்: உக்ரைனுக்கு அனுமதி வழங்கிய பிரித்தானியா

0

ரஷ்ய எல்லைகளில் தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தலாம் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன்(David cameron) தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை(16) உக்ரைனுக்கு விஜயம் செய்திருந்த அவர், சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளோடிமீர் ஜெலன்ஸ்கியுடன்(volodymyr zelensky) கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளியுறவுத் துறை அமைச்சா் டேவிட் கேமரூன், போரில் உக்ரைனுக்கு உதவியளிக்கும் வகையில் அந்த நாட்டுக்கு ஆண்டுதோறும் 3,000 கோடி பவுண்ட் (சுமாா் ரூ.3.14 லட்சம் கோடி) மதிப்பிலான உதவி வழங்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் முடிவு
அத்தோடு, பிரித்தானியாவினால் வழங்கப்படும் ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பில் உக்ரைன் முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உக்ரைன் விரும்பினால் ரஷ்ய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.