;
Athirady Tamil News

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர்..எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

0

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட காங்கிரஸ் தலைவர்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.ஜெயக்குமார் கடந்த மாதம், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பொலிஸில் புகார் அளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் கடந்த 2ஆம் திகதி இரவு மாயமானார். இதனால் அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்து புதூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் சடலம் பாதி எரிந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சோதனை
சம்பவ இடத்தில் இருந்து அவரது பான் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும், அதன் மூலம் தான் அவரது உடலை அடையாளம் கண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.