;
Athirady Tamil News

சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட வேலைத்திட்டம்

0

நாட்டில் இன்று விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் பாதுகாப்புக்காக 2000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை இன்று(06) ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

குறித்த பரீட்சை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.