;
Athirady Tamil News

அஹுங்கல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

0

அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.