2025 இலும் அகிலத்திருநாயகியின் சாதனைப் பயணம் தொடர்கின்றது: வாழ்த்திய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்!
இந்தியாவில் நடைபெற்ற 2025 தெற்காசிய மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் 3 வெள்ளிப்பதக்கத்தினைப் பெற்று சாதனை படைத்த சிறிசெயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களை மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களும் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் அவர்களும் வாழ்த்திப் பாராட்டிய இன்றைய தருணம்.
10000M ஓட்டத்தில் முதலாம் இடம்,
3000M வேகநடை இரண்டாம் இடம்,
1500M ஓட்டம் இரண்டாம் இடம்,
5000M ஓட்டம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டர் என்பது குறிப்பிடத்தக்கது.






