;
Athirady Tamil News

நடுவானில் அலறிய 245 பயணிகள்: விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்

0

யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லாகோஸில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

விமானம் அவசர தரையிறக்கம்
நைஜீரியாவின் லாகோஸில் இருந்து வாஷிங்டன் டி.சி.க்கு பயணித்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக முர்தலா முஹம்மது(Murtala Muhammed) சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

245 பயணிகள் மற்றும் 11 குழு உறுப்பினர்களுடன் பயணித்த போயிங் 787-8 ட்ரீம்லைனர்(Dreamliner) விமானத்தில் திடீரென கேபின் அழுத்தம் குறைந்து, பலமுறை திடீரென உயரம் குறைந்தது, இதனால் பயணிகள் மத்தியில் அச்சம் மற்றும் காயங்கள் ஏற்பட்டன.

6 பயணிகள் படுகாயம்
நைஜீரியா கூட்டாட்சி விமான நிலைய ஆணையம் (FAAN) விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், ஆனால் நான்கு பயணிகள் மற்றும் இரு குழு உறுப்பினர்கள் கடுமையான காயங்களுடன், 27 பயணிகள் மற்றும் ஐந்து குழு உறுப்பினர்கள் லேசான காயங்களுடன் இருந்ததாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

அவசர சேவைகள் விரைவாக செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கின.

நிகழ்வின் வீடியோ காட்சிகள் விமானத்திற்குள் நிலவிய குழப்பத்தை தெளிவாக காட்டுகிறது.

கேபின் அழுத்த இழப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அவசர தரையிறக்கத்திற்கு வழிவகுத்த தொழில்நுட்ப கோளாறின் காரணம் தற்போது விசாரணைக்கு உள்ளாகிறது.

யுனைடெட் ஏர்லைன்ஸ் அதிகாரிகளுடன் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளுக்கும் உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.