தென்னிலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் சம்பவ இடத்திலே மூவர் பலி

காலியின் ஹினிதும பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி. தெரிவித்துள்ளார்.
காலி ஹினிதும பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்தாரிகள் T56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.