;
Athirady Tamil News

மட்டக்களப்பில் ஐந்து பிள்ளைகளின் தந்தை அடித்துக் கொலை

0

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

சம்பவத்தில் ஓமனியாமடு கிராமத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார். சடலமானது பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.