;
Athirady Tamil News

தேங்காய் பற்றாகுறைக்கு தீர்வு கண்டுள்ள அரசாங்கம்

0

நாட்டில் நிலவும் தேங்காய் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சார்ந்த உற்பத்திகளையும், தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காய் துண்டுகளையும் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் தெங்கு உற்பத்தி போதுமானளவு இன்மையால் உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக உள்நாட்டுத் தேங்காய் மற்றும் உள்நாட்டு தெங்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கு அரசு தீர்மானித்திருந்தது.

தேங்காய் சார் உற்பத்தி
இந்நிலையில் தேங்காயை மூலப்பொருட்களாகக் கொண்டு இயங்குகின்ற தொழிற்றுறைகளுக்குத் தேவையான தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த ஏனைய மூலப்பொருட்கள் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு இணங்கி துரிதமாக இறக்கமதி செய்யக்கூடிய இயலுமையை குறித்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி அதற்கான பொறிமுறையைத் தயாரிக்குமாறு ஜனவரி 27ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டது.

அதற்கமைய, விவசாயத் திணைக்களம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தாவரத் தொற்றுக்காப்பு சேவை மற்றும் இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவனம் இணைந்து குளிரூட்டப்பட்ட தேங்காய் மற்றும் உலர் தேங்காய் துண்டுகள், தேங்காய் பால், தேங்காய்ப் பால்மா மற்றும் பதனிடப்பட்ட தேங்காய்ப்பூ போன்றவற்றின் இறக்குமதிக்கு ஏற்றவாறான வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழிகாட்டியைக் கடைப்பிடித்து, 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காயெண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காய் துண்டுகளையும் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்,பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பிப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.