;
Athirady Tamil News

பாலத்தை உடைத்து நீரோடையில் விழுந்த கார்; மூவருக்கு நேர்ந்த கதி

0

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில், கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து (13) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியிலிருந்த பாலத்தின் ஒரு பகுதியை உடைத்து நீரோடையில் விழுந்துள்ளது.

இதன்போது, காரில் பயணித்தவர்கள் 03 பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.