பணவீக்கம்: பிரித்தானியாவில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில் பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக கருவூலத்துறை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை அதிகரிப்பு
பிரித்தானியாவில், கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவில், ஜனவரியில் பணவீக்க வீதம் 3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய உணவுப்பொருட்களான பால், பாலாடைக்கட்டி, முட்டைகள் மற்றும் பாண் விலை கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.
மேலும், காபி, தேநீர், cereal வகை உணவுகள் மற்றும் மாமிசம் விலையும் அதிகரித்துள்ளது.
சர்க்கரை, ஜாம், சொக்லேட் மற்றும் குளிர் பானங்கள் விலையும் சற்று அதிகரித்துள்ளது. மொத்தத்தில், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன எனலாம்.