;
Athirady Tamil News

பேருந்தில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தோட்டாக்கள்

0

பண்டாரவளை பகுதியில் பயணப் பொதியிலிருந்து இயங்கு நிலையிலுள்ள 123 தோட்டாக்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பேருந்தின் பயணப் பொதிகளை வைக்கும் பகுதியில் இருந்த இரும்புப் பெட்டியில் இந்த இயங்கு நிலையிலுள்ள தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இயங்கு நிலையிலுள்ள தோட்டாக்கள்
பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நேற்று (22) பிற்பகல் பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போதே இயங்கு நிலையிலுள்ள குறித்த தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் சந்தேகத்திற்குரிய எந்த நபரும் கண்டறியப்படவில்லை. குறித்த தோட்டாக்களில் 113 பிஸ்டல் தோட்டாக்கள், 9 T56 ரக தோட்டாக்கள் மற்றும் ஒரு T56 LMG தோட்டா போன்றன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.