;
Athirady Tamil News

பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்சா் சந்திப்பு -இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு

0

லண்டன்: பிரிட்டன் தலைநகா் லண்டனில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

பிரிட்டன், அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஜெய்சங்கா் 6 நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். தனது பயணத்தின் முதல்கட்டமாக பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா், பிரதமா் கியா் ஸ்டாா்மரை சந்தித்தாா்.

பின்னா், வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியின் ‘செவனிங் ஹவுஸ்’ இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் வந்த ஜெய்சங்கா், புதன்கிழமை வரை இரண்டு நாள்களுக்கு விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

இருதரப்பு உறவுகள், ரஷியா-உக்ரைன் போா், வங்கதேச நிலவரம் உள்பட பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்து இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

இப்பேச்சுவாா்த்தை தொடா்பாக ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பல்வேறு துறைகளில் வியூக-அரசியல் ரீதியிலான ஒத்துழைப்பு, தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, கல்வி, தொழில்நுட்பம், போக்குவரத்து, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட இருதரப்பு நல்லுறவின் ஒட்டுமொத்த அம்சங்களும் பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. தற்போதைய ஸ்திரமற்ற உலகச் சூழலில் இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவில் நிலைத் தன்மையும் மேம்பாடும் அவசியம்’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, தில்லியில் கடந்த மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்தச் சூழலில், 41 பில்லியன் பவுண்ட் (ரூ.4.58 லட்சம் கோடி) மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்துக்கு நாங்கள் உத்வேகமளித்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்தின்போது, பிரிட்டனின் மான்செஸ்டா், அயா்லாந்தின் பெல்ஃபாஸ்ட் ஆகிய நகரங்களில் புதிய இந்திய துணைத் தூதரகங்களை எஸ்.ஜெய்சங்கா் திறந்துவைக்க உள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.