;
Athirady Tamil News

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இளம் பெண் கைது

0

திவுலப்பிட்டிய பகுதியில் பாரிய அளவிலான ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 21 வயதுடைய பெண் ஒருவரை திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திவுலப்பிட்டிய ஹொரகஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த இளம் பெண்ணிடமிருந்து 10 கிராம் 100 மில்லிகிராம் ஹெராயினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகள்
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் குறித்த பெண் ஹெரோயின் கடத்தலில் சிறிது காலமாக ஈடுபட்டு வருவதும், பல பகுதிகளுக்கு ஹெரோயின் விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

கைதான பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெராயின் தொகை இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பெறுமதியுடையது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைதான பெண்ணை பொலிஸார் மினுவாங்கொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய பின்னர், அவரை 18 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.