;
Athirady Tamil News

பிரித்தானியாவில் அரசு வேலைகள் குறைப்பு – செயற்கை நுண்ணறிவுக்கு முக்கியத்துவம்

0

பிரித்தானிய அரசு, அரசு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

அமைச்சரவை உறுப்பினர் பேட் மெக்ஃபாடன் (Pat McFadden) இந்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை BBC-யில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

புதிய அரசு திட்டம்
அரசுத்துறையின் திறனை அதிகரிக்க, டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அரசு விரைவுபடுத்தவுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில், அனைத்து அரசு ஊழியர்களில் 10% பேர் டிஜிட்டல் அல்லது தரவுத் துறையில் பணியாற்றுவார்கள் என்று மெக்ஃபாடன் கூறினார்.
“செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பம் வேலையைச் சிறப்பாக செய்யக்கூடியதாக இருந்தால், அதற்காக மனித வளத்தைக் பயன்படுத்த வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.

ஊழியர்கள் குறைப்பு & அரசின் பொருளாதார நோக்கம்
பிரெக்சிட் (Brexit) மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அரசுத்துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

2023-இல், அரசு பணியாளர்களின் எண்ணிக்கை 5,13,000-ஐ கடந்து, இது 2016-க்கு நிகராக 34% அதிகரித்துள்ளது.

அரசு செலவுகளை குறைக்கும் புதிய திட்டங்களை நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் மார்ச் 26 அன்று அறிவிக்க உள்ளார்.

இது ஒரு அரசியல்பூர்வமான முடிவல்ல, பணி செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது என்று மெக்ஃபாடன் கூறியுள்ளார்.

நலத்திட்ட மாற்றங்கள் & வேலைவாய்ப்பின் அவசியம்
அரசு நலத்திட்ட உதவிகளை (welfare benefits) மறுபரிசீலனை செய்யவுள்ளது.

அதிக அரசு பணியாளர்கள் என்பது வரி செலுத்துவோருக்கு நடக்கும் அநியாயம் எனவும், பிரித்தானியா மட்டும் தான் G7 நாடுகளில் முந்தைய வேலைவாய்ப்பு அளவிற்கு மீண்டும் செல்லவில்லை. இதை மாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம், அரசு செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், தொழில்நுட்ப வளர்ச்சியை மையமாக வைத்து நிர்வாக செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.