;
Athirady Tamil News

தாயுடன் குட்டி யானை செய்யும் அட்டகாசம்… கவலையை மறக்க வைக்கும் காட்சி

0

குட்டி யானை ஒன்று தனது தாயுடன் நின்று கொண்டு செய்யும் சுட்டித்தனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

விலங்குகளில் மிகவும் பெரியதும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்ததும் யானை ஆகும். யானையைப் பார்த்தாலே சிறுகுழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

உருவத்தில் மட்டுமே மிகப்பெரியதாக இருக்கும் யானை, குணத்தில் குழந்தை என்று தான் கூற வேண்டும். சில தருணங்களில் பாகன் வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிந்து நடப்பதை நாம் அவதானித்திருப்போம்.

அதே போன்று யானை மற்ற விலங்குகளுடன் நட்பாக பழகுவதை நாம் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

இங்கு குட்டியானை ஒன்று தன் தாயுடன் நின்று கொண்டு செய்யும் அட்டகாசம் பார்வையாளர்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெரிய யானைகளைப் போன்று தனது தும்பிக்கையை சுழற்றி இரை சாப்பிடுவது போன்று தனது செயலை வெளிப்படுத்துகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.