;
Athirady Tamil News

கடலில் தீப் பிடித்து எரிந்த நெடுநாள் மீன்பிடி படகுகள்

0

இன்று (17) அதிகாலை திக்வெல்ல – நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் நங்கூரமிட்டிருந்த இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.

தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுநாள் படகுகளின் உரிமையாளர் தீ பரவல் தொடர்பாக எவர் மீதும் சந்தேகம் இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.