;
Athirady Tamil News

இலங்கையில் கிறிஸ்த தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு ; வெளியான அதிர்ச்சி காரணம்

0

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பகுதியில் உள்ள கிறிஸ்த தேவாலயம் ஒன்றின் மீது நேற்று (18) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மன்னம்பிட்டி பிரதான வீதியில் வசிக்கும் 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தேவாலயத்தின் மத போதகர் உடனான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டின்போது உள்ளே எவரும் இருக்கவில்லை என்றும், தேவாலயகத்தின் யன்னல்களின் கண்ணாடிகள் மீதே துப்பாக்கி ரவைகள் பாய்ந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.