;
Athirady Tamil News

யாழில். முச்சக்கர வண்டியில் இரு இளைஞர்களை கடத்தி தாக்கிய வன்முறை கும்பல்

0

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களும் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர் தமது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை , முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த வன்முறை கும்பல் அவர்களை முச்சக்கர வண்டியில் கடத்தி சென்று மூர்க்கத்தனமாக தாக்கிய பின் வீதியில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

வீதியில் காயங்களுடன் காணப்பட்ட இரு இளைஞர்களையும் வீதியால் சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.