;
Athirady Tamil News

களனி ஆற்றில் மீட்க்கப்பட்ட ஆணின் சடலத்தால் பரபரப்பு

0

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பேலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, நேற்று (26) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் சுமார் 50 வயதுடையவர், சுமார் 5 அடி 6 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும் நீல நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் சற்று சிதைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.