;
Athirady Tamil News

கடும் மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

0

நாட்டில் கடும் மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் பெய்ய அதிக வாய்ப்பு காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், மேலும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.