;
Athirady Tamil News

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் மின்வெட்டு ; 50 மில்லியன் மக்கள் பாதிப்பு

0

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் முழுவதும் தொழில்நுட்ப கோளாறால் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் 50 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது பொதுப் போக்குவரத்து, விமான நிலையங்கள் மற்றும் முக்கிய தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளுக்கு பெரும் இடையூரை ஏற்படுத்தியுள்ளது.

நண்பகலில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாட்ரிட்டின் முக்கிய விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பிராட்பேண்ட், 5G மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகள் இரு நாடுகளிலும் செயலிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு ஐபீரிய தீபகற்பமும் இந்த மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயினின் மின்சார நிறுவனமான ரெட் எலக்ட்ரிகா தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.