அமெரிக்க ஜனாதிபதி அலுவலகத்தில் டிரம்ப் சுய உருவச் சிலை: வைரல் புகைப்படம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் தனக்காக ஒரு சுய உருவச் சிலையை நிறுவியுள்ளது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது, டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.
இந்தத் துயரமான சம்பவத்தை நினைவு கூறும் வகையிலும், தனது தைரியத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அவர் இந்தச் சிலையை நிறுவியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிலையின் புகைப்படத்தை வெள்ளை மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.