;
Athirady Tamil News

யாழ் நாகவிகாரையில் வெசாக் பூரணை தின நிகழ்வு

0

யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51 ஆவது படைப்பிரிவின் எற்பாட்டில் பூரணை வெசாக் தினம் நேற்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள ஸ்ரீ நாக விகாரையில் இடம்பெற்றன.

விகாராதிபதி ஸ்ரீ விமலரத்ன தேரர் பிரித் பாராயணம் செய்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஐகம்பத், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், யாழ் இந்தியத் துணைத் துதரக தலைமை நிர்வாக அதிகாரி ரம்யா,
51 ஆவது படை கட்டளைத் தளபதி
உள்ளிட்ட விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தார்.

மின்குமிழ்களினால் உருவாக்கப்பட்ட வெசாக் கூடுகள் மின் ஒளியேற்றி அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.