உள்ளூராட்சித் தேர்தல் வெற்றி: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட விசேட கூட்டம்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களாக போட்டியிட்ட அனைவருக்குமான விசேட கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த கூட்டம் நாளை சனிக்கிழமை (17) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் குறித்த கூட்டத்திற்கு கலந்துகொள்ளுமாறு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு விடுத்துள்ளார்.