தமிழரசு கட்சியின் தேர்தல் வேட்பாளர்களுக்கு மதுபானம் வழங்கியதாக சரவணபவன் கூறிய கருத்துக்கு எதிராக 100 கோடி நஷ்டஈடு கோரிக்கை.

தமிழரசு கட்சி தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு மதுபானம் வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறிய கருத்துக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழரசு கட்சியின் சுழிபுர கிளையின் உப தலைவர் சண்முகநாதன் ஜெயந்தன் என்பவர் தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.