;
Athirady Tamil News

24 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் ரஷ்யா-யுக்ரேன் போர் ; டிரம்ப் உறுதி

0

கடந்த ஆண்டு, டொனால்ட் டிரம்ப் யுக்ரேன் போரை “24 மணி நேரத்தில்” முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

கடந்த வாரம், தானும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேரில் பேசி தீர்வு காணும் வரை இதற்கு முடிவு கிடைக்காது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

ஆனால் திங்கட்கிழமையன்று, இந்த நிலைப்பாட்டில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது.

புதினுடன் நடந்த இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, ரஷ்யாவும் யுக்ரேனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் மூலம் மட்டுமே அமைதி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை தீர்மானிக்கக் கூடும் என்றும், ஒருவேளை போப்பின் உதவியுடன் அது நடக்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இருப்பினும், அமைதி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்னும் கைவிடவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.