மைத்திரி மகனுடன் கூட்டு சேரும் நாமல்

பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ஜனாதிபதி மாத்திரி பாலவின் மகனான தஹாம் சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த தேர்தல்களில், தஹாம் சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பணியாற்ற அழைக்கப்பட்டார். இந்நிலையில் நாமலின் அழைப்புக்கு தஹாம் சிறிசேன இன்னும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
அதேவேளை சமீபத்தில் பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வில் நாமலும் தஹாமும் இணைந்து இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்த நிகழ்வு பலரது கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.