;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் விபத்தில் உயிரிழந்த இலங்கைப்பெண்

0

சைப்பிரஸ் நாட்டில் இடம்பெற்ற விபத்தில் 55 வயதான இலங்கை பெண் உயிரிழந்துள்ளதாக நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச் சேர்ந்த வசந்தா வஜிரானி லியனகே என்பவரே உயிரிழந்துள்ளார். பெண் பயணித்த காரை 27 வயது நபர் ஓட்டிச் சென்றதாகவும், கார் லாரியில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடன் 23 வயது பயணி ஒருவரும் இருந்தார். அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்தப் பெண்ணை நிக்கோசியா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் இலங்கை பெண் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பில் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.